சிவ பூசை செய்பவரின் உயர்வு

Standard

சிவ பூசை செய்பவரின் உயர்வு


பஞ்சாக்கினி மத்தியின் நின்று தவம் செய்தல், நீரில் நின்று தவஞ்செய்தல், ஆகிய கடுமையான தவஞ் செய்தாலும், சிவ பூசை செய்யவில்லை எனில் அத்தவம் வீண் செயலாகும். சிவபூசை செய்யாதவர் சென்மம் வீண். அவர் செய்யும் மற்ற தவம், விரதம் , புண்ணியமும் வீணாம். இது உண்மை , சிவ பூசையில்லாமல் மற்ற தவம் விரத புண்ணியங்களை செய்பவர்கள் பிறந்து சுகித்து, சொர்க்காதி போகங்களை அநுபவித்து உழல்வார்கள். சிவபூசை செய்பவர்கள்சிவலோக முத்தியை பெறுவார்கள். இதற்கு பிரமாணம் சிவ ரகசியம் என்ற நூலில்
” ….. தெரிதருந் சிவபூசையற்றவர் சென்னமும்
தவ விரதமும் உரிய புண்ணிய கோடியும் பல
மொன்றுமில்லையே துண்மையே ” என்கிறது

சிவபூசை இல்லாது மற்ற தவங்கள் செய்தால் சொர்க்கலோக முதலான போக வாழ்வு பொருந்தும் பிறவி உண்டாகும்.
சிவபூசை செய்தால் பிறவி தொலையும். சிவபெருமான் உமா தேவிக்கு ஆகம உபதேசம்செய்தருள அவற்றை கேட்டருளிய உமா தேவி தேவரீருக்கு ஆகமங்களில் சொன்ன விசயங்களில் எது மிக வீரியமான செயல் என்று கேட்க சுவாமிகள் எனக்கு பூசையில் தான் அதிகம் விருப்பம் என்று கூறியருள, உமா தேவியும் காஞ்சிபுரத்தில் வந்து சிவ பெருமானை பூசை செய்தாள் என்று புராணம் அருளிச் செய்கிறது.
எண்ணிலாகமம் இயம்பிய இறவைர் தம்விரும்பும்
உண்மையாவது பூசனை என உரைத்தருள
அண்ணாலார் தமை அருச்சனைபுரிய ஆதரித்தாள்
பெண்ணில் நல்லவள் ஆயின பெருந்தவஞ் கொழுந்து — சேக்கிழார்

சிவபூசையில் பல வகையான கிரிகைகள் உண்டு. அவற்றை சோடசோபசாரம் (16) என அருள் நூல்கள் கூறும். இதில் ஒன்று பத்திர புஷ்பங்களால் சிவ நாமங்கூறி அருச்சனை செய்தல், ஆகம விதிப்படி தூய்மையாக மந்திரம் சொல்லி அருச்சனை செய்ய ேவ்ண்டும், ஒரு முறையும் (நெறி) தெரரியாத குரங்கு ஒன்றுவில்வ மரத்தில் உள்ள இலைகளை பறித்து கீழே போட்டது அது மரத்தடியில் இருந்த உமாமகேசுவரர் திருமேனியில் விழுந்தது. உடனே சிவபெருமான் அக்குரங்கை அழைத்து வில்லவத்தினால் நம்மை அருச்சித்தபடியால் நீ பூலோகத்தில் சோழ வம்சத்தில் அரசனாக பிறந்து. உலகத்தை ஆள்வாயாக என்று அருள் புரிந்தார். அப்படியே பிறந்து முசுகுந்த சக்கரவர்த்தியாக இவ்வுலகில் பெயர் பெற்று பூவுலகம் முழுவதமாக ஆண்டு சிவனருள் பெற்றது. இவ் வரலாற்றைக் கூறி அறிவில்லாத குரங்கு ஒரு நெறிமுறையும் தெரியாமல் வில்வ இலையை பறித்து போட்டதற்கு இறையருள் பெற்று மகிழ்ந்தது. என்றால் முறையாக வில்வத்தால் அருச்சனை செய்பவர்கள் பெறும் பேற்றை யாரால் கூறமுடியும். இதனை வியந்து உறைக்கின்றது கருவூரர் புராணம்.
இதனால் சிவபூசையில் ஒரு அங்கமாக உள்ள அருச்சனை மறை தெரியாத குரங்கு செய்து பெரும் பேறு பெற்றதென்றால் சிவ பூசை முழுவதும் முறையாக செய்பவர்கள் பேறு அடையும் விந்தையை விவரிக்க முடியுமா?
(இதுதான் நம் சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோயில் அருள்மிகு கைலாயநாதர் அமாவாசை சிவபூசையில் பங்கு பெறும் அடியார்கள் தாங்களே வில்வ இலை, மலர் கொண்டு மனத்தால் உருகி வாயால் (மொழி) சிவநாம வழி மந்திரம் தமிழில் கூறி , மெய்யால் தனது திருக்கரத்தால் மலரிட்டு அருசசித்து போற்றி அருச்சனை செய்து வருவது அனைவரும் அறிந்ததே,)
கண்ணபிரான் துவாபரயுக முடிவில் வைகுந்தம் செல்ல எண்ணும் போது முனிவர்கள் கண்ணபிரானடம் கலியுகத்தில் எப்படி நாங்கள் இருப்பது என்று கேட்க, அதற்கு கண்ணபிரான் , சிவபிரான் திருவடிக் கமலம் உண்டு, தீர்த்தமுண்டு, மலருண்டு, வெண்ணீறு உண்டு, ஐந்தெழுத்து உண்டு, ஆகையால் நீங்கள் கவலைப்பட வேண்டாம் இத்தனை கொண்டு சிவபிரானை அருச்சனை செய்யுங்கள் என்று கூறியதை கூரம புராணம் கூறுகின்றது.
விஷ்ணுபிரான் திருவிழிமமழலையில் திருச்சக்கரம் பெற 1000 மலர் கொண்டு அர்ச்சனை செய்துசக்கராயுதம் பெற்றதன் பலன் யாவரும் அறிந்ததே.
சைவாசாரிடத்தில் தீட்சை பெற்றவர்கள் சிவபூசை முறைப்படி செய்ய உரிமையுண்டு,தீட்சை பெறாதவர்களும் சிவ அருச்சனை செய்து புண்ணியம் பெறலாம், சிவ பூசைக்கு சிவ அருச்சனை செய்தல் சிவபுண்ணியம் ,சிவனடியார் பக்தி , சிவதருமம், சிவநூல்கற்றல், கேட்டல், சிவாலய தரிசனம் ஆகியவை அவசியமானது.
தீட்சை பெற்று சிவபூசை செய்வதால் பிறவி இல்லாத சிவகதி பெறலாம். தீட்சை பெற்று இல்லங்களில் ஆன்மார்த்த பூசை செய்யாது கோயில்களில் பிராத்த பூசை செய்பவர்கள் பூசையின் பயனை இழப்பார்கள். பிரம்மா, விஷ்ணு ஆன்மார்த்த பூசை செய்தே தங்கள் தங்கள் அதிகார கிருத்தியங்களை செய்பவர்கள்.
” திருநாமம் அஞ்செழுத்தை செப்பாராகில் ” என்னும் தேவாரத்தில் உணரப்படும் சிவபூசை (அருச்சனை) செய்யாது உண்டவனது உணவு உணவாகாது. அவன்சிவார்ச்சனை இன்றி நீங்கிய முப்புரத்து அசுரர் போலத்தண்டிக்கப்படுவான்,
சிவ லிங்க பூசா பலத்தினாலேயே தேவர்,மனிதர், முதலியோர் செலவத்தோடு வாழ்கின்றனர். சிலர் சத்துருக்களை செயித்து பூமியை அரசாட்சி செய்தார்கள். சிலர் புத்திரர், பசு,செளந்திரியம்,முதலியவற்றை அடைந்து செழிப்புடன்வாழ்கிறார்கள். சகலதருமங்களிலும் இடையூறு இன்றி முற்று பெறும்என்றும், தம்மை அன்போடு வழிபடுபவர்களுக்கு குழைந்து நிற்பார் என்பதும் காமாட்சி அம்மைசெய்த சிவ பூசையினாலேயே பெறப்படும். சகல பாவங்களும் பிராயசித்தமாய் உள்ளது சிவ பூசை
இதனாலேயே அகத்தியர், மார்கண்டேசுவரர் பிரம்மா, விஷ்ணு மற்றும் உமாதேவி, விநாயகர், முருகர், இந்திரன் முதலான தேவர்கள், ஆகியோரும் தேசங்கள் நீங்கவும், மனிதர் அரக்கர் குலத்தோரும், எறும்பு முதல் யானை இறாகவும், பறவை மற்றும் அனைத்து ஜீவ ராசிகளும்சிவபூசை செய்து பயன் பெற்றது பற்றி அதன் அதன் வரலாறுகளால் அறியலாம்.
திருச்சிற்றம்பலம்
இதன்படி சிவ அருச்சனை தாங்களே தனது மனம், மொழி, மெய்யால் சிவபூசையில் அருச்சனை செய்ய அபிசேகப் பொருள்களுடன் ஆத்தடி விநாயகர் கோயில் அ.மி, கைலாய நாதர் சன்னதியில் ஒவ்வொரு அமாவாசை தினத்தில் பூசையில் கலந்து சிவபுணணியம் பெற அன்புடன் அழைக்கிறது, திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றம் சுந்தரபாண்டியம், வாருங்கள் அருச்சனை செய்யுங்கள் பலன் அடையுங்கள்
திருச்சிற்றம்பலம்

” உள்ளவா காணவந் தருளாய் ” என்கிறார் மாணிக்க வாசகர்

Standard

” உள்ளவா காணவந் தருளாய் “


என்கிறார் மாணிக்க வாசகர் தன்னை ஏற்கனவே தானே வந்து என்னை முக்தி பேறு அளிக்கிறேன் என்ற இறைவரிடம் தன்னால் தவற விட்ட அந்தப் பேற்றை மீண்டும் பிறவா நிலைஎனும் அபர முக்தி பேற்றை எனக்கு மீண்டும் தர நான் நேரில் காண என்முன் வந்து அருள் செய்வாய் என்று கோயில் பதிகம் என்னும் சிதம்பரததில் வேண்டும் பதிகப்பாடல் 1 இப்பாடல் இறைவனை நம்முள் அருள் வழங்க எழுந்தருளச் செய்யும் பாடலாக அமைகிறது. நாமும் உள்ளம் உருக மனம், மொழி, வாக்கால் பாடித் துதித்தால் நம் முன் இறைவன் வந்து அருள் புரிவான் என்ற நம்பிக்கையை ஊட்டும் பாடல்
மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத் தமுதே
ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி
உள்ளவா காணவந் தருளாய்
தேறலின் தெளிவே சிவபெரு மானே
திருப்பெருந் துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
இன்பமே என்னுடைய அன்பே தி,மு, 8 கோயில் பதிகம் பாடல் 1

தேனின் தெளிவானவனே! சிவபிரானே! திருப் பெருந்துறையில் வீற்றிருக்கின்ற சிவனே! அளவு இல்லாத பதவிகள் எல்லாவற்றையும் கடந்து நின்ற ஆனந்தமே! என்னுடைய அன்பு உருவமே! பகைத்து, என்னை மயக்கச் செய்யும் வஞ்சனையைச் செய்கின்ற ஐம்புலன்களின், வாயில்களையும் அடைத்து அமுதமே சுரந்து நின்று என்னகத்தே தோன்றுகின்ற ஒளியே! உன்னை நான் உள்ளவாறு காணும்படி வந்தருள்வாயாக.

உன்னை நான் உள்ளவாறு காணும்படி வந்தருள்வாயாக. என்பதால் இறைவன் தனக்கு சொரூப நிலையில் தனக்கு காட்சி தந்து அந்நிலையில் அருளும் முக்தி அபரமுத்தியாதலால் அதனை எனக்கு தந்தருள் என்று என்றும் தான் ஏற்கனவே பரமுக்திக்கு தகுதி பெற்று அதனை நழுவ விட்டவனல்லவா? எனவே எனக்கு சுத்த தத்துவ நிலையில் சுத்த சாயுக்யம் என்ற மீண்டும் பிறப்பற்ற அபர முக்தி தந்தருள என் முன் வந்தருள்வாயாக என்கிறார்.
ஆசான் மூர்த்தியாய் வந்து ஆட்கொண்ட கோலம், இறைவனது இயற்கைக் கோலம் அன்றாதலின், இயற்கைக் கோலத்தில் காணுதலை, உள்ளவா காணுதல் என்றார். இக்காட்சி, சிவலோகத்தே காணப்படும்.
சிவலோகம் அல்லது சிவபுரம்என்பது, சுத்த தத்துவ புவனங்கள், அனைத்திற்கும் பெயர். இப்புவனங்கள் ஏனைய அசுத்த தத்துவ புவனங்கட்கு உள்ளீடாய் அவற்றோடு உடன் நிற்பனவும், அவை அனைத்திற்கும் மேலாய் அவற்றைக் கடந்து நிற்பனவும் என இரு கூறுபட்டு நிற்கும். அவ் இருகூற்றுள், அசுத்த தத்துவ புவனங் களோடு உடனாய் நிற்கும் சிவலோகம்,பதமுத்தித் தானம்என்றும், அவற்றிக்கு அப்பாற்பட்டு நிற்கும் சிவலோகம்,அபரமுத்தித் தானம்என்றும் சொல்லப்படும். அவற்றுள் பதமுத்தித்தானம்,சரியை, கிரியை, யோகம்என்னும் மூன்று நிலைகளின் நின்றோர் சென்று அடையும் இடமும், அபரமுத்தித்தானம், ஞானத்தில்,கேட்டல், சிந்தித்தல், தெளிதல்என்னும் நிலைகளில் நின்றோர் சென்று அடையும் இடமுமாம். நிட்டையை அடைந்து மீளாது நின்றோர், இவை அனைத்தையும் கடந்து சிவனோடு இரண்டறக் கலப்பர். நிட்டையிலே நிலைத்து நில்லாது மீட்சி எய்துவோர், அபரமுத்தித் தானத்திற் சென்று தடத்த சிவனை அடைந்து, அவனது அருள் வழியே பின்னர்ச் சொரூப சிவனை அடைவர், பதமுத்தித் தானத்தை அடைந்தோர் தாம் செய்த சரியை முதலியவாகிய தவத்தின் வன்மை மென்மைகட்கு ஏற்ப அங்கு நின்றே ஞானத்தை அடைந்து, அபரமுத்தி, பரமுத்திகளில் ஏற்ற பெற்றியாற் செல்லுதலும், மீள இந்நிலவுலகிற் பிறந்து ஞானத்தை அடைந்து, கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்பவற்றால் பின்னர் அபரமுத்தி, பரமுத்தி களை அவ்வாற்றான், அடைதலும் உடையராவர். அபரமுத்தித் தானத்தை அடைந்தோருள் அசுத்தவுலகை நோக்குவோர் அரியராக லின், அவர்க்குப் பிறப்பு உண்டாதல் மிகச் சிறுபான்மையே.அபர முத்தர்க்குப் பிறப்பில்லைஎன்பதும் பெரும்பான்மை பற்றியேயாம். ஆயினும் நிட்டை கூடாதவழி, அசுத்த உலகை நோக்கும் நோக்கு ஒழியாது ஆகலானும், அந்நோக்கினை, கேட்டல் முதலிய மூன்று ஞானங்களும் மெலிவித்தலும், கெடுத்தலும் பெரும்பான்மை யாயினும், சிறுபான்மை அது தப்புதலும் கூடுமாகலின், பிறத்தல் அவர்க்கும் சிறுபான்மை உளதேயாம். காண அருளாய்என இயையும். வந்து - மீளத் தோன்றி,ஈறிலாப் பதங்கள் - அள வில்லாத உலகங்கள். ``ஈறிலா`` என்றதனை, இன்பத்திற்கு அடை யாக்குவாரும் உளர். ``யாவையும்`` என்றதனால், அபர முத்தித் தானமாகிய சுத்த மாயா புவனங்களும் அடங்கின.இவை அனைத்தை யும் கடந்த இன்பம்என்றதனால், அது பரமுத்தி இன்பமாதல் வெளிப்படை. இவ்வின்பத்தைப் பயக்கும் அன்பு,காண்பான், காட்சி, காட்சிப்பொருள்` என்னும் வேற்றுமை தோன்றாது காட்சிப் பொருளாகிய சிவம் ஒன்றே தோன்ற நிற்கும் அதீத நிலைக்கண்ண தாகிய பேரன்பாகலின், அதனை இறைவனின் வேறாக அருளாது. என்னுடைய அன்பே என, ஒன்றாகவே அருளிச்செய்தார். எனவே,
அன்பு சிவம்இரண் டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவதும் ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
(தி.10 திருமந்திரம் – 270.) என்றருளிய அன்பும் இதுவேயாதல் பெறப்பட்டது

அடிகள் இறைவனை இவ்வாறு விளித்தமையால் அவர் விரும்பியது பரமுத்தி இன்பத்தையன்றி வேறொன்றையன்று என்பது தெள்ளிதாதலின், அவர் பலவிடத்தும் தமக்குத் தருமாறு வேண்டும். சிவலோகம் அல்லது சிவபுரம் என்பது, அபரமுத்தித்தானத்தையன்றிப் பதமுத்தித் தானத்தையன்றென்பது இனிது விளங்கும். அன்னதா யினும், அடிகள் பரமுத்தியை வேண்டாது, அபர முத்தியையே வேண்டுதல் என்னையெனின், திருப்பெருந்துறையில் தம்மோடு உடன் இருந்து அருள்பெற்ற அடியார்கள் பலரும் அடைந்தது அபர முத்தியே என்னும் கருத்தினால், தமக்கும் அதுவே தரற்பாலது என்னும் உணர்வினாற்போலும் என்க. அபரமுத்தித் தானத்தில் அடை யும் நிலைகள் வாளா, சாலோகம், சாமீபம், சாரூபம் எனக் கூறப் படாது, சுத்த சாலோகம், சுத்த சாமீபம், சுத்த சாரூபம் என வேறு வைத்துக் கூறப்படும்; அந்நிலையே அடிகளால் குறிப்பிடப்படுவது என்க. அதனை அடிகள் வேண்டுவதும் அவற்றில் உள்ள விருப் பத்தால் அன்று; அதனையடைந்துவிடின், பின்னர்ப் பிறப்பில்லையாய் ஒழியும் என்னும் துணிவினாலேயாம் என்க.
திருச்சிற்றம்பலம்

ஆன்மீக சக்தி வன்னிமரம் கொண்ட நம் ஆத்தடி பிள்ளையார் கோயில்……

Standard

வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. வன்னி மரம் என்று சொன்னாலே விருதாச்சலம் என்றுதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துதான் அந்தக் கோயிலைக் கண்டினார்கள் என்று சொல்வார்கள்.

எப்படி என்றால், அங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர் அங்கேயே வாழ்ந்து அங்கேயே ஒரு கோயிலைக் கட்டிவிட்டு ஜீவ சமாதியும் அடைந்திருக்கிறார். அவர் என்ன செய்வாரென்றால், தினசரி வேலையாட்களுக்கு அந்த வன்னி மரத்தின் கீழ் உட்கார்ந்து வன்னி இலைகளை உருவி அந்த வேலையாட்களுக்கு கொடுப்பாராம். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அந்த அளவிற்கு அது பொன்னாக மாறுமாம். ஒன்றுமே உழைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் அது இலையாகவே இருக்குமாம். கடினமாக வேர்வை சிந்தி அனைத்தும் செய்தவர்களுக்கு அத்தனையும் தங்கமாக மாறுமாம். இது வரலாற்றுச் சான்றுகளில் இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகளில் இருக்கிறது. அப்படியொரு சக்தி இந்த வன்னி மரத்திற்கு உண்டு.

இன்றைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்களை அந்தக் கோயிலிற்கு அழைத்துச் செல்லலாம். அங்கு இன்னமும் அந்த பழமையான வன்னி மரம் இருக்கிறது. அதற்குக் கீழே விபசித்தி முனிவருடைய உருவமும் இருக்கிறது. அதை வழிபட்டால் எல்லா வகையிலும் சிறப்புகள் உண்டாகும். இந்த வன்னி மரப்பட்டையினுடைய கசாயம் குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த வன்னிக்கு உண்டு. வன்னி மரக்காற்று பட்டால் கூட மிகவும் நல்லது. அந்தக் காற்றிலேயே தொடர்ந்து இருந்தால் சுவாசக் கோளாறுகள் எல்லாம் நீங்கும்.

வன்னிக் காயை பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனை, அதிகமா ரத்தப் போக்குப் பிரச்சனையெல்லாம் தீரும். அந்த அளவிற்கு மருத்துவ குணம் அதில் இருக்கிறது. இதேபோல, இந்த வன்னிக்காய் பொடியை சாப்பிட்டால் விந்தணுக்களுடைய நீர்ப்புத் தன்மை திடப்படுத்தும். ஏனென்றால் நல்ல விந்தணு, கருவுறுவதற்கான விந்தணு என்றால், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. நல்ல விதத்தில் இருக்க வேண்டும். நீர்த்துப்போன விந்தணுவில் இதெல்லாம் நல்ல விதத்தில் இருக்காது. மிகக் குறைவாகவும் இருக்கும். இந்தப் பொடியை தொடர்ந்து சாப்பிட்டால் விந்து கட்டும். கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும்

திருச்சி மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வன்னிய சமுதாய மக்கள் வன்னி மரத்தைப் புனித மரமாகக் கருதுகின்றார்கள். வன்னிய சமுதாய மக்கள் மரணம் அடைந்தபின் வன்னிமரக்கட்டைகளின் மீது பூத உடலை வைத்து எரித்து சாம்பலாக்கும் பழக்கம் இன்றும் காண முடிகிறது.

இந்தியப் பாலைவனங்களின் தங்க மரம்’ எனச் சிறப்பிக்கப்படுவது வன்னி மரம். பாலைவனங்களிலும் வானிலை அதிகம் வறண்டிருக்கும் பகுதியிலும் தாக்குப்பிடித்து வளரக் கூடிய பசுமை மாறாத மரம் வன்னி. இதன் அனைத்துப் பகுதிகளுமே பயன்படுவதால், ‘கற்பகதரு’ என்றும் சொல்வார்கள்.

சனி பகவான் கோவிலில் வணங்கப்படும்வன்னி மரம் (PROSOPIS SPICIGERIA LINN) திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் பாடல் :வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர்தூவி நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில் கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும் மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே வன்னி மரத்தைப் பற்றி ரிக்வேதம், மகாபாரதம் மற்றும் ராமாயணத்திலும் கூறப்பட்டிருக்கின்றது. மார்ப்புச் சளியையும் இந்த வன்னிக்காய் பொடி எடுக்கும். இந்த வன்னி இலையை அம்மியில் அரைத்து அப்படியே புண் இருக்கும் இடத்தில் கட்டினால் அப்படியே சரியாகிவிடும். எல்லா மரத்தையும் கரையாண் அறிக்கும். ஆனால் இதை மட்டும் கரையாண் தொடாது. நெருங்கவே முடியாது. அப்படியென்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த மரத்தினுடைய அமைப்பு எவ்வளவு வலிமையானது என்றுபல ஆலயங்களில் தலவிருட்சமாக இருப்பதே இந்த வன்னி மரம்தான். விருதாச்சலத்தை எடுத்துக்கொண்டால் வன்னி மரம்தான் தலவிருட்சம். இராம பிராண் இராவணை நோக்கி போர் தொடுக்கப் போகும் முன்பாக வன்னி மரத்தை தொட்டு வணங்கி வலம் வந்து சென்றதாக ஐதீகம். அதேபோல, வள்ளிக் குறத்தியை மணப்பதற்காக முருகன் வன்னி மர வடிவில் காட்சியளித்ததாகவும் ஐதீகம். 

அதேபோல, பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் செல்வதற்கு முன்பாக நிராயுதபாணியாக இருக்க வேண்டுமல்லவா, அப்பொழுது அவர்களுடைய ஆடை, அணிகலன்கள், ஆயுதங்கள் அனைத்தையும் ஒரு பெரிய துணியில் வைத்துக் கட்டி, மரஉறி தறித்து கிளம்புவதற்கு முன்பாக, வன்னி மரத்தடியில் வைத்துச் சென்றதாகவும் ஐதீகம். அப்படியானால், இது ஒரு பாதுகாப்பிற்கு உரிய மரம், சத்தியத்திற்கு கட்டுப்பட்ட மரம் என்ற அதன் தன்மை நமக்குத் தெரிகிறது. 

வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவமாக போற்றப்படுகிறது. அது துர்கை கோயில் கொண்டிருக்கும் இடமாகும்.

உமா தேவி வன்னிமரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

வன்னிமரம் விநாயப்பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களில் அக்னி சொரூபம் ஆகும். பொறையாருக்கு அருகில் உள்ள சாத்தனூர், பாசிகுளம் விநாயகர் சாஸ்தாவுக்கு அக்னி சொரூபமாக வன்னிமர வடிவில் காட்சி கொடுத்ததாக ஸ்தல மகாத்மியம் கூறுகிறது.

வன்னிமர இலையை வட மொழியில் சமிபத்ரம் என்று கூறுவார்கள்.

இது விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்திற்குரிய இலையாகும்.

நவரத்தினத்தில் நீலக்கல் பதித்து, வன்னி மரத்தின் அடியில் மேற்கு திசையை நோக்கி மகரம், கும்ப ராசியில், இந்த ஆலயத்தில் சிறப்பான பூஜைகள் நடைபெறுகின்றன.

சிறப்பு வாய்ந்த வன்னி மரம்:

வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. இன்றைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்களை அந்தக் கோயிலிற்கு அழைத்துச் செல்லலாம். அங்கு இன்னமும் அந்த பழமையான வன்னி மரம் இருக்கிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த வன்னிமரம் நம் ஆத்தடி பிள்ளையார் கோயிலில் முதுகுன்றம், கொடுமுடி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் போன்ற சிறப்பு தலங்களில் அமைந்து பக்திக்கும் முக்திக்கும் சிறப்புடைய கோயில்களின் வரிசையில் நம் ஊர் ஆத்தடி விநாயகர் கோயிலும் கைலாயநாதர் சன்னதியும் அமைந்து பெருமை சேர்த்துள்ளது நம் ஊர் ஆத்தடி விநாயகர் கைலாய நாதர் ஆலயம் மேலும் இங்கு தட்சிணா மூர்த்தியும் அமைந்து சிறப்புடையது எனவே இத்தல இறைவர்களை அனுதினமும் வழிபட்டால் இந்த வன்னிமரத்தின் மருத்துவ குணமும் சனி பகவான் நிவர்த்தியும் கிடைக்கும் என்பது ஐதிகம்

திருச்சிற்றம்பலம்

மானிடர் வாழ்வில்…..முதுமையும் … திருமுறை வழிகாட்டலும்

Standard

         

மானிடர் வாழ்வில்…..
முதுமையும் … திருமுறை வழிகாட்டலும்


அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது. அவ்வாறு பிறந்த காலை தவம் செய் வழியில் பிறந்தலும், ஊனமற்று பிறப்பதும், முன்னே பிறப்பின் தவச்செயலே. இவ்வாறு பிறந்த நாம் நம் பிறப்பின் பயன் அறியாது இறையை மறந்து தான், நான் என்ற ஆணவ மலத்தாலும், ஞான அறிவு இழந்து லெளவீக வாழ்வில் பொன், பொருள் எவ்வழியிலாவது சம்பாதிப்பது என்றே வாழ்ந்து நிலையில்லாத பொய் இன்பம் அனுபவித்து பின் வரும் வாழ்வில் நாம் அடைய வேண்டிய மெய் இன்பத்தை (வீடுபேறு) மறந்து வாழ்வை வீணே போக்கிவிட்டு இந்த பொய்யான உடல் வலுவிலந்து தடுமாறும் போதுதான் சற்று இறை சிந்தனை சற்று உற்று நோக்குகின்றோம்,இம் மானிட உடல் முதுமை அடையும்போது ஆங்கிலக் கவிஞர் சேக்பியர் அவர்கள் கூறியது போல முதுமை பருவம் இரண்டாம் (படி நிலை) குழுந்தை பருவம் என்றார் (செக்கண்ட் சைல்டு ) இப்பருவம் மானிடர் வளர்ச்சியில் பின்சூழல் சூழற்சி பருவம் , எவ்வாறு குழந்தை படுக்கையில் கிடந்து,தவழ்ந்து, நடந்து தன் பயணத்தை தொடர்ந்தது போல் இதுவே எதிர் வளர்ச்சி யாக முதுமையில் அடைகிறோம். இந்த பருவமான உட்கார்ந்து ,தவழ்ந்து, படுக்கையில் கிடக்கும் பருவத்தில் யார் இந்த உடலுக்கு துணை? இல்லத்தரசியும்நம் வயதினாராக இருந்தால் இருவருமே ஒத்த நிலையில்தானே இருப்பார்கள்.
நாம் ஈன்றெடுத்த தவச் செல்வங்களும் நம்மை போன்றே லெளவீக வாழ்க்கையில் தன் சுய உணர்வில் தன் வாழ°க்கையை தன் குடும்பம், தன்வாழ்வு என்று முதியோரை பேணும்நிலையிலிருந்து ஓதுங்கி விடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் எங்கள் வயதும் முதுமையை நெருங்கி விட்டது (அப்போது அவர்கள் வயது50/60 என்ற நிலையில் .) நாங்கள் எங்களை பேணுவதே சிரமமாக உள்ளது என பின்னடைகின்றனர். எனவே இப்பருவத்தில் முதுமையில் உள்ளவர்கள் படும் துயர் இறைவனிடம் சரணாகதி அடையும்நிலையில் உள்ளது. இதனை சிந்தனையில் கொண்டு நம் இளம்வயது வாழ்வு பருவத்தில் இறைவன் அளித்த இந்த பொய்யான மெய் உடலை நிலையற்ற செல்வம் சம்பாதிக்க்வே பயன்படுத்திவிட்டோம் அவன் அளித்த திரி கரனங்களான மனம், மாெழி (வாய்) மெய்யை இறைவனின் நாமத்தை மனதில் கொண்டு எண்ணாமலும், வாயால்அவன் புகழ் பாடி போற்றுதலும். இந்த உடல், கை, கால்களை கொண்டு அவனை சென்று அடைந்து அவனுக்கு பணிவிடைகள் (உழவாரப்பணி) செய்யாமலும், இலை, மலர் காெண்டு அவன் திருவடிக்கு சமர்பிக்காமலும்இருந்து வீணே கழித்து விட்டதை உணரும் பருவம் தான் இந்த முதுமை பருவம் எனவே இம்முதுமை பருவத்தில் தான் படும் துன்பத்திலிருந்து விடுபட ஒரு அருளாளர் வேண்டிய பாடல்
” பாயில் கிடக்காமல் பாழும் மனம் நோகமல்
நோயில் படுக்காமல் நொந்து மனம்வாடாமல்
உற்றார் சாடாமல் ஊண் உடல் நோகாமல்
உன் நினைவில் என் உயிர் பிரிந்து
உன் பாதம்அடையஅருள் வாய் ” என்று நொந்து நொக்குஉருகி வேண்டுகிறார்.
திருமுறைகளில் கண்ட நாயன் மார்களும்இதற்கு விலக்கல்ல. ஏன் நாவுக்கரசர் பெருமானே தனது கடைசி வாழ்வில் கைலாயமலை செல்ல அவர்தன் உடம்பால் நொந்து இறைவனிடம் அடைந்தது அவரின் முதுமையில் அவர் அனுபவித்த துன்பம் தானே. மற்ற அடியார்கள் முதுமையின் கொடுமையில் அகப்படாத நிலையில் அப்பர் அடிகள்மட்டும்தான் முதுமையில் உடல் துன்பம் கொண்டார் என்பது அவர் வரலாறு உணர்த்தும். அவர் மட்டும் அல்லர். நான் யார்? என்ற கேள்விக்கு விடை கண்ட ஸ்ரீ ரமணே மகிரிஷியும் தன் மூப்பு பருவத்தில் தன் துன்பத்தை அனுபவித்தே கழித்தார் என்பது அவர் வாழ்வு உணர்த்தும்.இது போன்றே எத்தனையோ சித்தர்களும் துன்பம் பெற்றுதான் இறைவழிபாட்டின் தொடர்ச்சியால் துன்பம் நீங்கி இறைவனை அடைந்து சிவமுக்தி பெற்றுஉய்வு பெற்றுள்ளார்கள்.
திருமுறைகளில் காணும் வழி காட்டுதல்கள் ° 11ம் திருமுறை காடவர்கோன் நாயனார்
இவருடைய வெண்பாக்கள் யாவும்யாக்கை நிலையாமையை உணர்ந்து நம் உடல் இளமை பருவத்தில் இருக்கும் போதே இன்றே இப்போதே இளமை பருவத்திலே இருக்கும் போதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும் என்றும் மூப்பு பருவத்தில் உடல் செயல் இழந்த நிலையில் நாம் எல்லாேரும்போய் சேரும் இடம் அம்பலமே (மயானமே) என்றும் அந்த மயானமே திருச்சிற்றம்பலம் என்றும் கூறி முதுமையில் அடையும் வழி சிவவழிபாடு ஒன்றே என்கிறார்.
அவருடைய 3வது பாடலில் முதுமையில் ஒரு உடல் அடையும் துயரத்தையும் அதன் பொருட்டு அதனைவிட்டு நீங்க வழிமுறையினையும் கீழ் கண்ட வாறு பாடியுள்ளார்

பாடல் எண் : 3
குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி,
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை .

வயது மூப்பு அடையும் போது நெடுக நடந்து போக இயலாமல் இடைஇடையே குந்திக் குந்தி எழுந்து நடக்கும் போதும் தட்டுத்தடுமாறு நடக்கும் பாேது துணையாக ஒரு கைத்தடி யை ஊன்றிக் கொண்டு நடக்கும் போது வாயில் குவழை நீர் உள்ளேயும் செல்லாமல், வெளியேயும் வராமல் இருமி, நொந்து ஏங்கி கஷ்டப்படும் காலத்தில் நெஞ்சே ஐயாறு ஆற்றங்கரையில் அமர்ந்துள்ள ஐயராப்பனை அழை என்கின்றார்.அப்போது தான் உன் முதுமை கஷ்டங்கள் நீங்கி விரைவில் இறைவனை அடைவாய் என்கிறார்.
மூப்பு வந்தவுடன் உற்றார், சுற்றத்தார் மனைவி மக்கள் எல்லோரும்மனம் மாறி விடுவர். மூப்பு என்னும் நொய் வருவது கண்டு அஞ்சிய நமக்கு வந்து விட்டது கண்டு அஞ்சாது இருக்க இறைவனுக்கு நம் திருகரணங்களால் பணி செய்வதே என்கிறார்.
பழுவை தாங்கும் வண்டியின் அச்சு போல இருந்த இந்த உடம்பு செயலற்று விட்டது, இனி சேரும் இடம் அம்பலமே என்கிறார் இதில் அமபலம் என்றது மாயானத்தையும், நன்நெஞ்சே தில்லை சிற்றம்பலமே சேர் என்பது தில்லைவானனையே சேர் என்பதும் விளங்கும்்
“உய்யும் மருந்த தனை உண்மின்
………… பைய எழுந்திரு ……..
…….நெஞ்சே செழுந்திரு மயானமே சேர் “

இப்படி இருக்க காரைக்கால் அம்மையார் மட்டும் தன் இளமை பருவத்திலேயே முதுமையை வேண்டி பெற்றார். தன் தலையாலேயே கைலாய மலை சென்றார் மேலும் இறைவா எனக்கு மறுபிறப்பு அளித்தால் உன்னை என்றும் நான் மறவாதிருக்க மனம் தர வேண்டும் என்றும் நீ ஆடும் போது உன் காலடியில் இருக்க அருள் தருள் வாயாக என்று வேணடினார்.

பட்டினத்தார் வாயிலாக நாம் அறிவது
மூப்பு பருவத்தில் நமக்கு யாரும் துணை வர மாட்டார்கள் அப்போது நமக்கு துணை கச்சி ஏகம்பன் ஒருவனே என்கிறார்.

ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ்
சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி ஏகம்பனே.

காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே
பாலுண் கடைவாய்ப்படுமுன்னே மேல்வி ழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு !

விட்டுவிடப் போகுதுயிர் விட்ட உடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் பட்டது பட்(டு)
எந்நேரமும் சிவனை ஏந்துங்கள் போற்றுங்கள்
சொன்னேன் அதுவே சுகம்.

ஐயுந்தொடர்ந்துவிழியுஞ்செருகியறிவழிந்து
மெய்யும்பொய்யாகிவிடுகின்றபோதொன்று வேண்டுவன்யான்
செய்யுந்திருவொற்றியூருடையீர்திருநீறுமிட்டுக்
கையுந்தொழப்பண்ணியைந்தெழுத்தோதவுங்கற்பியுமே

கருத்து ; கோழை(சளி) மேலிட்டு, கண்பார்வை இழந்து, அறிவு வேலை செய்யாதொழிந்து, மெய்யென்று எண்ணியிருந்த உடம்பு ெபாய்யாகிப் போகும் பொழுது ( மரணம் நேரிடும் தருவாயில், (ஒன்றுவேண்டுகிறேன்) திருவொற்றியூரில் உறையும் சிவ பெருமானாரே, எளியன் திருவெண்ணீரு அணிந்து , கையால் தங்களை தொழுது, சிவாயநம / நமசிவாய எ்னனும் திரு ஐந்தெழுத்ைத சொல்ல வேண்டும். அப்போதைக்கு இதனை சொல்ல முடியாத நிலையில் அதன் பொருட்டு இப்பொழுதே சொல்லி வைக்கின்றேன். இறைவா! நின் திருவருள் புரிவாயாக !

குறிப்பு; மரணம் நேரிடும்பொழுது அறிவு வேலை செய்யாது, ஆதலால் நலல நினைவு உள்ள பொழுதே இறைவரிடம் அன்றாடம் இப்பாடலை சொல்லி வேண்டுதல் வேண்டும், மரண காலத்தில் அருள் செய்வார், எந்த நினைவுடன்உயிர் பிரிகின்றதோ அதே நிலையில் மறுபிறப்பும் அமையும். இதனைத்தான் கிராமப்புறங்களில் மரணப்படுக்கையில் உள்ளபோது காலம் தாழ்ந்து உயிர் பிரியும் நிலை ஏற்படும் தருணத்தில் ” சாகப்போகும் போது சங்கரா, சங்கரா ” என்றால் பல்ன கிடைக்காது எ்ன்பனர் பெரியோர்க்ள.
” புலன் ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவு அழிந்திட்டு ஐம்மேல் உந்தி அமந்த போதாக அஞ்சே்ல் என்று அருள் செய்வான் … ” திரு ஞான சம்பந்தர் / திருவையாறு பதிகம்
எனவே மானிட வாழ்வில் மூப்பு என்பது எல்லோருக்கும் உண்டு என்றாலும் அவரரவர் வினைப் பயனை கொண்டு இறைவன் நமக்கு வினையின் பயனாக பாவம் புண்ணியங்களை அவ்வப்போது ஊட்டுவார் எனவே நாம் மூப்பு பருவத்தில் மரண அவஸ்தை எனும் கொடிய விலங்கிலிருந்து தப்பிக்க நம் இளமை பருவம் தொட்டே இறைவழிபாடு செய்து மனம் மொழி மெய்யால் அவனுக்கு பணிவிடை செய்தும் போற்றி பாடி ஆடி அவன் மனம் குளிர அவன் தாள் சேர வேண்டும் எனவே வந்த பின் வழிபாடு என்பது கண் போனபின் சூரிய நமஸ்காரம் என்பது போன்றதாகும். எனவே எப்போதும் இறைவழிபாடு கட்டாயம் அவனுக்கேன்று சற்று நேரம் ஒது்க்கி பொன் பொருள் ஈட்டு வது போன்றே இறைவழிபாட்டுக்கும் நேரம் அளித்து அவனை எப்போதும் நெஞ்சில் இறுத்தி அவன் தாள் பணிவோம். மரண அவஸ்தையிலிருந்து விடுபடுவோம்
திருச்சிற்றம்பலம்

றைவர் எழுதும் வரிநெடும்புத்தகம்

Standard
tm-7
இறைவர் எழுதும் வரிநெடும்புத்தகம்
பட்டினத்தடிகள் அருளிய கோயில் நான்மணி மாலை என்னும்பகுதி பதினொன்றாவது திருமுறையில் பட்டினத்தடிகளின் இறைவன் எழுதும் வரிநெடும் புத்தகத்தில் தன் பெயரை சேர்த்து எழுதும்படி வேண்டிக்கொண்டது
கயிலையில் உள்ள சிவபெருமானார் ஒரு நீண்ட கோடுபோட்ட நோட்டுபுத்தகம் வைத்துள்ளார். அதில் சிவத்தொண்டு செய்வோர் பிறர் நலத்திற்கு உழைப்போர் ஞானிகள் அருளாளர்கள் ஆகியோரின் பெயர்களை எழுதி வைத்துள்ளார்
இந்நோட்டு புத்தகத்தில் இடம்பெற்றவர்களுக்கு இனி பிறவி எடுப்பது என்பது இல்லையாகிவிடும். அந்தப் புத்தகத்தில் தம்முடைய பெயரையும எழுதும்படி இறைவனிடம்வேண்டுகிறார் பட்டினத்தடிகள்,
ஒரு கட்சியின் தலைவர் தன் பாக்கெட் நோட்டில் அவ்வப்போது தான் நினைக்கின்ற தொண்டர்களின் பெயர்களை எழுதி வைத்துக்கொண்டு பதவிகள் பகிர்நதுஅளிக்க நேரும் போது அந்த வரிசையில் உள்ள தொண்டர்களின் பெயர்களை கொண்டு சான்ஸ் அளிப்பது போல நம் இறைவன் நமக்கு முக்தி பேரின்பம் அளிப்பார். அவரால் தான் முக்திபேற்றை அளிக்க முடியும். இதற்கு தான் அந்த வரிநெடும் பத்தகம் பயன்படுத்துகிறார் என்கிறார் அடிகள்
” தம்மை மறந்து நின்னை நினைப்பவர்
செம்மை மனத்தினும் தில்லை மன்றினும் நடம்
ஆடும் அம்பல வாண,,,,,,,
நின் தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து
என்னையும் எழுத வேண்டுவன், நின்னருள்
ஆணை வைப்பில் காணொனா அணுவும்
வானுற நிமிர்ந்து காட்டும் “

இதனை போன்று நம் அப்பர் அடிகள் கூறும் பாடல்
” தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
பொழுது போக்கி புறக்கணிப்பாரையும்
எழுதும்கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே …… திருமுறை 5

சிவபெருமானாரை மலர் தூவி நெஞ்சம்உருகி வழிபடுபவர்களையும் பிறர் கதைகளைப் பேசி (புறம்பேசுதல்) பொழுதைவீணே கழிப்பவர்களையும் இறைவர் தம் குறிப்பேட்டில்எழுதி வைக்கிறார் என்கிறார்
மேலே கண்ட பாடல் கள் வாய்லாக நாம்உணர வேண்டியது
1. நமக்கு மேலே ஒருவர் இருக்கிறார் அவர் மிக வல்லமை படைத்தவர்
2. நம்முடைய செயல்பாடுகள் யாவற்றையும் பாவச் செயல்கள், புண்ணியச் செயல்கள் ஆகியவற்றை இறைவர் ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதிக் கொண்டு வருகிறார்.
இவற்றை உணர்ந்து வாழ்க்கையை வாழ வேண்டும். மறந்தும் பிறருக்கு தீமை செய்து விடக் கூடாது. அதற்குரியபலனை நாம் அனுபவித்தே ஆக வேண்டும் இன்று நாம் வாழும் வாழ்க்கை கடந்த பிறவிகளில் நாம் செய்த வினைகளின் பயனே அன்றி வேறு இல்லை என்பதை மிகத் தெளிவாக உணர்தல் வேண்டும். இதை உணர்ந்து செயல்படல் வேண்டும் இதனால் ஆகாய வினை வரா,பிராப்த வினை நீங்கும்
திருச்சிற்றம்பலம்

சிவபூசை இலக்கணம்

Standard

சிவபூசை இலக்கணம்


நாம் முற்பிறப்பில் செய்த புண்ணிய காரணமாக பெறுதற்கரிய இம்மானிட தேகத்தை பரம்பொருளாகிய பரமன் நமக்கு தந்து வைதிக சைவ சித்தாந்த சமயத்தில் ஜனனமாகவும் திருவருள்பாலித்தருளினார். நமக்கு இம்மானிட தேகத்தை சிவபெருமான் தந்தது சரியை,கிரயை, யோகம், ஞானம் என்னும் சிவபுண்ணிய காரியங்களை செய்து தம்மை வழிபட்டு சிவ ஞானத்தை உதிக்கும்படி செய்து, முத்தி இன்பததை தரும் பொருட்டேயாம்.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கும் படி முறையாக அரும்பும், பூவும் காயும், பழமும் போன்று ஒன்றற்கொன்று தொடர்ச்சியும், ஏற்றமும் உடையனவாயுள்ளன. அது…….
விரும்புஞ் சரியை முதன் மெய்ஞ்ஞான நான்கும்
அரும்பு மலர் காய் கனி போ லன்றே பராபரமே …… என்கிறார் தாயுமானவர்
அவற்றுள் சரியையாவது புறத் தொழில் மாத்திரையானே சிவபெருமானுடைய உருவத்திருமேனியை நோக்கி வழிபடுவதாம். திருக்கோயில் உழவாரப்பணி, கோயில் சுத்தம் செய்தல், மலர் பறித்து மாலை ெதாடுத்தல், சிவத்ெதாண்டு செய்தல் போன்ற புறத்தொழிலாகும்.
கிரியை யாவது, ஆசாரியரிடத்தில் விசேட தீட்சை பெற்று, அருவுருவத்திருமேனி( சிவலிங்க திருமேனி) ஆகிய சதாசிவ மாகிய திருமூர்த்தி சிவபெருமானை ஏற்று, அகத்தொழில் புறத்தொழில் என்னும் இரண்டினாலும் வழிபடுவதாம். அது ஆணவ மலத்தை நீக்கி, பிறவி ஒழித்து, சிவமுத்தியை தரும்படி வேண்டி தூப தீபம் சந்தனம், பஷ்பம், திருமஞ்சனம் முதலிய பூசை உபகரணங்களையும் கொண்டு பஞ்ச சுத்தி செய்து, அகமும் புறமும், பூசித்து, அக்கினி காரியமும் பண்ணி சிவபெருமானிடம் நம் உடல், பொருள் , ஆவி மூன்றையும் ஒப்பிித்தலாகிய சிவபூசையாம்.
மந்திரம், கிரியை, முத்திரை, பாவனைகளால் மனம் மொழி மெய் என்னும் மூன்றும் ஒருமித்து மெய்யன்போடு கிரியை,செய்தல் வேண்டும். அன்பின்றி செய்யும் கிரியையால் பயனில்லையாம். அன்பு முக்கியம் என்பது
கோடி தீர்த்தம்கலந்து குளித்தவை
ஆடினாலும் அரனக்கு அன்பில்லையேல்
ஓடு நீரினை ஓட்டைக்குடத்தட்டி
மூடிவைத்திட்ட மூர்க்கனை ஓக்குமே ,,,,,,,என்ற திருமந்திரத்தாலும்

நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுள்ளே
புக்கு நிற்கும் பொன்னார் சடை புண்ணியன்
பொக்கமிக்கவர் பூவும் நீருங்கண்டு
நக்கு நிற்பனவர் தம்மை நாணியே ,,,,……. என்ற நாவுக்சரசர் அருள்வாக்காலும் உணரலாம்
சிவபெருமானை வழிபாடு செய்யும்கிரமங்களை சிவாகம நூல்கள் தெளிவு
டன் அறிவுறுத்துகின்றன.அதன் மூலம் அறிந்து சிவபூசை செய்து முக்தி பேரின்பமும்,இம்மையில் பெருவாழ்வும் பெற்று வாழ்வோமாக.
திருச்சிற்றம்பலம்

பரம்பொருள் ஒன்றே

Standard

பரம்பொருள் ஒன்றே

மேன்மை மிகு பைந்தமிழர்களால் காலம் காலமாகப் பின்பற்றப்பெற்று வந்த சைவ சித்தாந்தம் என்னும் தமிழர் செந்நெறி “கடவுள் ஒன்றே” என்பதனை மிகத்தெளிவாகவும் ஆணித்தரமாகவும் வழியுறுத்தியும் கூறுகின்றது. சித்தாந்த சைவத்தின் உண்மைகளை விளக்குகின்ற பதினான்கு மெய்கண்ட நூல்களில் ஒன்றான “உண்மை நெறி விளக்கம்” என்னும் நூல் “கடவுள் ஒன்றே” என்று கூறுகின்றது. உமாபதி சிவச்சாரியார் என்பவரால் இயற்றப்பெற்ற இந்நூல் பரம்பொருள் ஒன்று என்றும் அது எங்கும் நிறைந்திருக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றது. சித்தாந்த சைவத்தின் மெய்கண்ட நூல்களில் தலைமணி நூலாகிய சிவஞானபோதம் அருளிய மெய்கண்ட தேவர் “ ஒன்றென்றது ஒன்றே காண், ஒன்றே பதி” என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இறைவன் ஒருவனே என்று தெளிவுபடுத்துகின்றார். இந்நூல் ஒவ்வொரு சைவரும் படித்தோ அல்லது குரு வழி கேட்டோ உணர்ந்திருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

பெருமானின் திருவருளால் பால் சோறு ஊட்டப்பெற்ற திருஞானசம்பந்தப்பெருமான் தாம் அருளிய திருமுறையில், “ஈறாய் முதல் ஒன்றாய்” என்றும் “ஓருருவாயினை” என்றும் பரம் பொருள் ஒன்றே என்றும் கூறுகின்றார். திருநாவுக்கரசு சுவாமிகள், “உலகுக்கு ஒருவனே” என்கின்றார். அவரே மற்றொரு திருமுறையில், “ஈரில்லாதவன் ஈசன் ஒருவனே” என்று கடவுள் ஒன்று என்பதனை நிறுவுகின்றார். திருவாசகம் அருளிய மணிவாசகப் பெருமானோ “ஒருவன் என்னும் ஒருவன் காண்க” என்று பரம்பொருள் ஒன்றே தான் என்று அறுதியிட்டுக் கூறுகின்றார். மூவாயிரம் தமிழ் மந்திரம் அருளிய திருமூல நாயனார் யோக நெறியில் உறைப்பாக நின்று அட்டமாசித்திகளைக் கைவரப் பெற்றவர். அவரும் “ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வம்” என்று கூறுகின்றார். அதோடு மட்டும் நில்லாமல் அதனை மறுத்துப் பல தெய்வம் உண்டு என்பவர்களுக்குச் சென்று சேருவதற்கு யாதும் ஒரு கதி இல்லை என்பதனை, “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் ….. நுஞ்சித்தத்து” என்கின்றார். அதாவது ஒவ்வொருவரும் வாழ்வில் உய்வு பெற வேண்டுமானால் பரம்பொருள் ஒன்றே என்பதனை நன்றாக நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டுக் கூறுகின்றார்.

இன்று நம் அருமைத் தமிழர்களின் வழிபாட்டைச் சற்று கூர்ந்து நோக்கினோமேயானால், “பரம் பொருள் ஒன்று” என்ற சிந்தனை உள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்பதனை எவராலும் மறுக்க முடியாது. பெரும்பாலோரின் வழிபாட்டு அறையில் சிவன், அம்பாள், முருகன், விநாயகன், திருமால், கண்ணன், இராமர், இலக்குமி, சரசுவதி, குபேரன், காளி, மாரியம்மா, முனியாண்டி, துர்க்கை, ஐயப்பன், மதுரை வீரன், நாகம்மாள், அனுமான், சங்கிலிகருப்பன், சாய்பாபா, சிரிடி பாபா என்று எண்ணற்ற திருவுருவங்கள் வைக்கபட்டு வழிபாடு செய்யப்படுவதைக் கண்கூடாக காண முடிகின்றது. இதனால் சிலருக்கு எந்த தெய்வத்தை வணங்குவது என்பதிலும் அதிகமான குழப்பங்கள் உள்ளது. ஒன்றை வழிபட்டு மற்றொன்றை விட முடியுமா என்ற கேள்வி பலரிடத்தில் உள்ளது.

ஆலயத்திற்குச் சென்றாலோ அங்கே பல வடிவங்கள் வைக்கப் பெற்றிருக்கும். பெருமான் கொண்ட அருள் திருமேனிகள் அங்கே சிலை வடிவிலோ சுதை வடிவிலோ செய்யப்பட்டும் செதுக்கப்பட்டும் அழகுற வர்ணங்கள் தீட்டப்பட்டுக் காட்சியளிக்கும். இவை பெருமானின் அருட்கோலங்கள் என்று புரியாதவர்கள் அங்குக் காணப்படும் ஒவ்வொரு வடிவமும் தனித்தனி கடவுள் என்று எண்ணி மயங்கி அவற்றை வழிபடுகின்றனர். அவ்வாறு வழிபடாது விட்டால் அந்த கடவுளர்களெல்லாம் சினம் அடைந்து நமக்குரிய சித்திக்குத் தடையாகிவிடுவர் என்று பலரும் அஞ்சுகின்றனர்.

மேலும் ஆலயத்தில் உள்ள பூசகர்களில் சிலரோ நம்முடைய ஒவ்வொரு தேவைகளுக்கும் ஒரு கடவுளரின் பெயரைச் சொல்லி அவரை வழிபட்டால்தான் அந்த காரியம் ஒரு தடங்கலும் இன்றி நிறைவேறும் என்பதனைப் போன்ற தோற்றத்தினை ஏற்படுத்துகின்றனர். சில நேரங்களில் பணம் அல்லது வருமான நோக்கத்திற்காகவும் சமய தெளிவு குறைவாக உள்ளவர்கள் குழப்பப்படுகிறார்கள். ஒருவர் கல்வியில் தேர்ச்சி பெற வேண்டுமானால் அது சரஸ்வதியின் கையில் தான் இருக்கிறது என்று நம்மில் பலர் நம்புகிறோம். பணம் வேண்டும் என்றால் இலக்குமியால் தான் முடியும் என்று நினைக்கின்ற நிலையைக் காண்கின்றோம். அந்த நிலையும் இன்று மாறி இலக்குமியை விட குபேரனைப் பெறுமளவு வழிபடுவது காணமுடிகின்றது.

சைவர்களுக்கே உரிய திருமுறைகளும் சாத்திரங்களும் பரம்பொருள் ஒன்றுதான் என்பதனை அறுதியிட்டுக் கூறுகின்றன. செந்தமிழர் சைவப் பெட்டகமான பெரிய புராணத்தில் இடம் பெற்றுள்ள அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரும் சிவ வடிவத்தைத் தவிற வேறு எந்த வடிவங்களையும் வழிபட்டதாகக் குறிப்பு இல்லை. எனவே சைவம் ஒரு கடவுள் கொள்கையை உடையது என்பதும் சைவர்கள் உணர வேண்டிய பரம் பொருள் ஒன்றே என்பதனையும் நன்கு தெளிந்து, ஓர் உருவ வழிபாட்டிற்குள் செல்ல வேண்டும். திருமுறை கற்பது, சமயக் கல்வி கற்பது, சமய சொற்பொழிவுகளைக் கேட்பது, சமய நூல்களை வாசிப்பது போன்றவை நமக்கு ஒரு தெளிவான சிந்தனையைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. சைவர்கள் இனிவரும் காலங்களில் ஒரு வடிவத்தினை, அதுவும் குறிப்பாகச் சிவ வடிவத்தினை வைத்து வழிபடுவதன் முதன்மையைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதனால் நம் இளைய குமுகாயத்தினரைத் தடுமாற்றத்திலிருந்து காப்பாற்றியவர்களாக நாம் ஆவோம்.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!

சுந்தரபாணடியம் பிடிஒ கருப்பசாமி-பார்வதி தம்பதியரின் சதாபிசேக விழா

Standard

வாழ்த்துவோம் ! வணங்குவோம்!!

சுந்தரபாணடியம் பிடிஒ கருப்பசாமி-பார்வதி தம்பதியரின் சதாபிசேக விழா

விருதுநகர் மாவட்டம் -ஸ்ரீவில்லிபத்தூர் வட்டம் சுந்தரபாண்டியம் மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்களில். சுந்தரபாண்டியம் சாலியர் மூக வம்சா வழியில் முதல் பட்டதாரி ஆகி தான் பெற்ற கல்வியின் பயனை கற்றறிவு இல்லாதவ்ர்கள் எல்லோரும் பய்ன்பட வேண்டுமென்ற நல்லெண்ணம் கொண்டு. தான் பெற்ற வறுமை. க்ஸ்டங்களை வரும் சந்ததியர்களும் வம்சாவழியினிர்களும் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தில் தன்க்கு கிைட்த்த வாய்ப்பு தனது திறமை. பொருள் உதவி கள் வழங்கி, இன்றுவரை தன்னால் இயன்ற அளவில் முடியாது என்று மறுக்காத நிலையில், ஆடம்பரமற்ற உதவிகள் செய்து, அதனால் முன்னேறிய குடும்பங்களை கண்டு தானும் மகிந்து, இன்று 80 அகவை கடந்து சதாபிஷேக விழா காணும் ” சுந்தரபாண்டியம் பட்டியாவீட்டு பிடிஒ கருப்பசாமி ” என்ற புகழோடு சுந்தரபாண்டியத்திற்கு பெருமை சேர்த்து, ஏழுர் சாலியர் குலத்தில் ஆண்டிபட்டி என்றால் சடையாண்டி, ஸ்ரீவி என்றால் தரகனார் மற்றும் பிஏ கோவிநத்ன், புனல்வேலி என்றால் கிருஷ்ணமூப்பர்,சத்திரபட்டி என்றால் பண்ணையார் என்பது போல் சுந்தரபாண்டியம் என்றால் பிடிஒ கருப்பசாமி என்ற அளவிற்கு சுந்தரபாண்டியத்திற்கு பெருமை சேர்த்து கொடுத்த இம்மண்ணின் மைந்தர் உயர்திரு க,கருப்பசாமி – உமையாள்பார்வதி தம்பதியரின் 80 அகவை தாண்டி சதாபிஷே விஷா காணும் இம்மண்ணின் மைந்தரிடம் 3,6,2013 அன்று சுந்தரபாண்டியம் சாலியர் சமுதாய திருமண மண்டபத்தில் நடைபெறும் சதாபிஷேக விழாவில் நாமும் கலந்து அன்னாரை வாழ்த்தி , வணங்கி ஆசி பெறுவோம்,

இன்று 80 அகவை தாண்டி சதாபிஷேகம் காணும் மதிப்பிற்குரிய பெரியவர் திரு,பிடிஒ கருப்பசாமி அவர்களின் நற்குண்ங்களை இந்நாளில் நினைவுகொள்வது அன்னாரின் பெருமை சேர்ப்பதாகும், இளம் வயதில் மிகவும் ஏழை-வறுமை படிப்பறிவற்ற குடும்பத்தில் தோன்றியதால் தான் பெற்ற வறுமை, படிப்பறிவின்மை என்பது தங்களின் சந்ததியர்களுக்கு அறவே இருக்கக் கூடாது என அன்றே முழு முயற்சி,தன்னம்பிக்கை விடாமுயற்சி போன்ற எண்ணங்களின் சிந்தனையுடன் பேராடி சுந்தரபாண்டியம் நெசவாளர் – சாலியர் மக்களின் முத்லபட்டதாரியாகி,அரசுப்பணியில் சேர்ந்து, வெற்றி கண்டு தன் வறுமைக்கும், படிப்பறிவற்ற தனது குடும்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார், இளம் பருவத்தில் தொட்கக கல்வி கூட பள்ளி மூலம் தொடர முடியாத சூழ்நிலையில் தனியார் ஆசிரியர் ஒருவர் மூலம் இஎஸ்எல்சி என்ற 8வகுப்பு அரசு தேர்வு எழுதி அதன் பின் ஸ்ரீவி, சிஎம்எஸ் பள்ளியில் எஸ்எஸ்எல்சி பயின்று இன்டர் மிடிேய்ட மதுரை தியாகராஜா கல்லூரியில பயின்று பின் அங்கேயே பிஏ பட்டம் பெற்றார்,இவ்வாறு பள்ளி வாழ்க்கை தொடர இதுதான் வழி என வழிகாட்டல் வழியின்றி தானே தனக் கென்று வழிசெய்து தாய் தந்தையரின் குறைந்த வருவாய் பொருளாதார நிலையில் படிப்பதற்கென்று சரியான ஒளிவிளக்கோ இடவசதியோ இல்லாத சூழலில் அன்றைய வசதி கொண்ட தெறகுகீழ்த்தெருவிலுள்ள அழகு மூப்பனார் அவர்களின் வீட்டு மேல் மாடி வரண்டாவில் சிறிய மண்ணெண்ணை சிமினி விளக்குடன் தனது படிப்பு காலத்தை கழித்து வெற்றி கண்டார், அன்னார் கல்லூரி வாழ்க்கையில் இருந்த போதும் எளிய உடை எல்லோரிடமும் அன்பாக பழகும் தன்மை தனது வயதிற்கு குறைந்தவர்கள் பள்ளி படிப்பை முடிகக கையாளும – வழிகாட்டல் முயற்சி என்பது அன்றிலிருந்து இன்றுவரை மாறா தன்மை கொண்டது,

அன்னாரின் உயர்ந்த பண்புகளை சீரிய நல்வழிகளையும் பெற அவர் குருவாகவும், நான் சிஷ்யனாகவும் அடைய இரண்டு வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது,அதை இன்றளவும் என்னால் மறக்கமுடியாது. அதில் ஒன்று நான் சுந்தரபாணடியம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 5வது படிவம் (அதாவது 10ம்வகுப்பு)படிக்கும் போது எங்கள் பள்ளியில் எஙக்ள வகுப்பிற்கு ஆங்கிலப்பாடம் நடத்தும் துணை ஆசிரியராக பணியாற்றிய போது, அவரிடம் பயிலும் மாணவனாக இருந்த பெருமை எனக்கு சேரும், அன்னார் அன்றைய நாளில் பாடம் நடத்திய விதம் எல்லோரையும் ஆங்கிலப் பாடத்தின் மேல் கொண்ட பயம் விலகியது, 2வது முறையாக அன்னார் பஞ்சாயத்து யுனியன் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய காலத்தில் அன்னார் காரியபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகராக இருந்த போது நான் அங்கு வேளாண்மை பண்டகசாலையில் உதவி வேளாண்மை அலுவலராக பணியாற்றிய காலத்தில் அன்னரின் நிர்வாக கட்டுபாட்டில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்து, அன்னார் காரியபட்டியில் பிடிஒ வாக பணியாற்றிய போது அன்னார் அருப்புககோட்டை கோட்டத்திற்கே கோட்ட வளர்ச்சி அலுவலராக நியமனம் செய்யப்பட்டார், பின் நானும் அக்கோட்டத்தில் அருப்புக்கோட்டையில் உதவி விதை அலுவலராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்து,அன்னார் உயர் அலுவலராக பணியாற்றிய போது சக பணியாளர்களிடம் தன் க்டடுப்பாட்டில் உள்ள பணியாள்ர்களிடமும் எப்போதும் அன்புடனும் அரவணைப்புபடனும் நேர்மை, காந்திய கொள்கையான சத்திய சமதர்ம கடமை உணர்வுடன் பணியாற்றிய சிறப்பு அன்னாரின் புகழுக்கு பெருமை சேர்ததது, அவர் சென்று பணியாற்றி ய இடமெல்லாம் சீரும் சிறப்பும் பெற்றவர்

” ஊருனி நீர்நிறைத் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு,

என்ற வள்ளுவர் வாக்கினுக்கிணங்க அன்னார் தான் பெற்ற கல்வி பயன் சுந்தரபாண்டியம் சாலிய வம்ச வழியினரும் அடைய வேண்டுெம்ன்ற தனியாத தாகத்தால் எங்கள் தெருவிலுள்ள இளம் வயதினரை அவர் கல்விக்காக வழிகாட்டிய நிகழ்வுகள் எங்களால் மற்கக முடியாது, அவரவர் வசதிக்கேற்ப என்ன படிப்பு எங்கு படிக்கலாம் என்ற வழிகாட்டும் தூண்டிதல் அன்னாருக்கேஉயரிய பண்பாக அமைந்தது, அதும்ட்டுமன்றி தன்னால் முடிந்த பொருள் உதவிகளும்செய்து அன்பு காட்டியுள்ளார், எஙக்கள் பகுதியில் வாசகசாலையுடன் இணைந்த பொது மண்டபம் கட்ட ஆலோசனை பெற அன்னாரிடம் சென்ற போது அன்னார் குடும்பமே தானே முன்வந்து மண்டபத்திற்காக பெரும் தொகை வழங்கி அன்னாரின் தாய்தந்தையரின் நினைவாக மண்டபம் கட்ட உதவி செய்தது அவருடைய ஈகை குணத்தை தெள்ளத தெளிவாக காட்டும்,

அது ம்டடுமன்றி அன்னார் இன்று வரை பணியாற்றும் கலசலிங்கம் பல்கலையில் உயர் கல்விக்காக செல்லும் ஏழை எளிய விபரமற்ற மாணவர்களுக்கு உகந்த துறையினை எடுத்துக் கூறி படிப்பதற்கும் கல்வி வள்ளல் அவர்களிடம் அறிமுகப்படுத்தியும்,குறைந்த நன்கொடையில் சேர்த்து அவர்களை சிறந்த பட்டதாரிகளாக ஆக்கிய பெருமை அவருக்கேசேரும், மேலும் உடலால், உழைப்பால் இயலாதருக்கு வயதான முதியோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை இன்றளவும் செய்து வருகிறார், நெசவு தொழில் நலிவடைந்த போது கல்வி தந்தையிடம் நேரிடையாக கூறி பல்கலை கல்லூரிகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுத்தந்துள்ளார்

அய்யா அவர்கள் சிறந்த பகுத்தறிவு சிந்தனையாளர் எழுத்தாசியர் தன்னை கொண்டவர், அன்னார் தன் இளமைப்பருவத்திலேயே எழுத்தாளாராக இருந்தவர் தன்னுடைய மைத்துனர் ஆா,வி,பி, கரிகாலன் அவர்கள் நடத்திய திரைமுழக்கம் என்ற திங்கள் இதழில் எழுதிய பெருமை படைத்தவர், அன்னார் இன்றளவும் இதனை தொடர்ந்து வருகிறார் நம் கல்வி வள்ளலின் சாலியர் குரலில் இன்றளவும் அன்னாரின் சிற்ந்த க்டடுரைகளை காணலாம்,அப்பணி இனறும் தொடர்கிறது, அதும்ட்டுமன்றி பெரியாரின் முற்போக்கு சிந்தனையாளர், சுயமரியாதை சிந்தனையில் மிகுந்த நாட்டம் உள்ளவர் தன்னுடைய திருமணத்தை அக்காலத்திலேயே ஆன்மீக முறைப்படி நடப்பதை தவிர்த்து புரோகிதர்,ஒதுவார்கள் இல்லாமல் கட்டிமேளம் சடங்கு சாஸ்திர முறைகள் இல்லாமல் பேராசிரியர் தலைமையில்,பெரியோர்கள் முன்னிலையில் மேடை நிகழ்ச்சியாக மணமக்கள் மாலை மாற்றும் முறையில் திருமணத்தை நடத்தி சீர்திருத்த முறை கல்யாணமாக ஆக்கி சீர்திருத்த சிந்தனையாளர், முற்போக்கு கருத்தில் தீவிர சிந்தனை இருந்தாலும் ஊர் நடைமுறை பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப தெய்வீக காரியங்களுக்கும் மரியாதை கொடுப்பவர், கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்க்ல் தெய்வீக நிகழ்வுகளில் ஊரார் உறறார் மனம் சுழியாது அதற்கேற்ப பங்கு கொள்ளும் தன்மை கொண்டவர்,

பொது வாழ்வு மற்றுமன்றி தனது சொந்த வாழ்விலும் தனது வாரிசுகளை வளமுடன் வாழச் செய்தவர்,

“தந்தை மகற்காட்டும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச செயல்” என்ற வள்ளுவன் வாக்கிணங்க தனது புதல்வர்கள் புதல்விகளை நன் முறையில் ஏனையோருக்கு எடுத்துக்காட்டாக விளங்கச் செய்தவர்,

அதற்கொப்ப அன்னர் புதல்வ மக்களும்

” மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவண்தந்தை

என்றோற்றான் கொல் ” என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க அன்னாரின் மக்களும் இன்று கல்வி தொழில் பதவிகளில் உயர்ந்து குன்றின்மேல்இட்ட தீபமாக திகழ்கின்றனர், எனவே அன்னார் தற்போதும் எந்த கவலையும் இன்றி சேவை மனபான்மையில பணியுடன் அமாந்த பணியை இன்னும் செய்து கொண்டு சிற்ப்புடன் வாழ்ந்து வருகிறார், அன்னார் இன்னும் நுாறு அகவை தாண்டி நூற்றாண்டு விழா கொண்டாடும் வாய்ப்பினை அளிக்க ஆண்டவனை வேண்டி நாமும் அன்னாரிடம் ஆசிபெற்று நாமும் சிறக்க, அவரும் சிறக்க ஆசி பெறுவோம்,

இவண்: வை, பூமாலை சுந்தரபாண்டியம்

திருமுறைகள் பாராயணம் செய்வோம் அருள் பெறுவோம்

Standard

திருமுறைகள் பாராயணம் செய்வோம் அருள் பெறுவோம்
சைவத்தின் பொது நூல் வேதம், சிறப்பு நூல் ஆகமம் என்படும். முழுமுதற் கடவுள் சிவபெருமானார். திருமுறைகள் தமிழ் வேதம்என போற்றப்படுகின்றன. சிவனாரின் திருவருளை முழுமையாகப் பெற்ற திருவருட் செல்வர்களால் சிவபெருமான் உள்நின்று உணர்த்தி பாடப்பெற்ற தெய்வத்திருநூல்களேதிருமுறைகளாக வகுக்கப் பட்டன, திருமுறைகள் தேவாரம், திருவாசகம் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பிரபஞ்சம் , திருத்தொண்டத்தொகை என பனிரெண்டாகும்.
ஆலயங்களிலும் வீடுகளிலும், சைவ திருச்சபைகளிலும் கடவுள் வழிபாட்டின் போது
பாடப்படுவது இத்திருமுறைப் பாடல்களே. இத்தோத்திரப்பாடல்கள் பிரணவமயமானவை இவற்றுடன்வேறு பாடல்களை சேர்த்து பாடக்கூடாது. அவ்வாறு சேர்த்து பாடினால் சிவநிந்தனையாகும். அவ் அருட்பாக்கள்மட்டுமே கடவுள் சன்னதியில் ஓதத் தகுந்தவையாகும்.இத்திருமுறைபாடல்கள் பாடத் தொடங்கும் முன்னும் பாடி முடிந்த பின்னும் திருச்சிற்றம்பலம் என்ற மந்திரம் ஓத வேண்டும்.
தேவாரம்,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு திருத்தொண்டர் புராணம் என்ற ஒழுங்கு முறையில் பஞ்சபுராணம் ஓதப்படுதல் முறையாகும்.
இத்திருமுறை பாடல்களை இறைவனை நினைந்து, மனமுருகி, மனம் மொழி மெய்யால் கண்ணீர் மல்க கசிந்து ஓதுவார் நன்னெறக்கு இட்டுச் செல்லப்படுவார் என்பது அருளாளர்களின் முடிபு.
பரம் பொருளாகிய சிவபெருமானை வாழ்த்தி துதிப்பனவாகவும், அப்பெருமானின் பெருமை சிறப்பு பற்றி போற்றுதல் செய்பவன வாகும். சைவ சமய உண்மைகளை நிலை நிறுத்துவனவாகவும், பக்தியையும், தெய்வீகத்தையும் வளர்ப்பனவாகவும், மந்திரம், மருந்து, தந்திரம் எனமூன்றுமாய் விளங்கி தீரா நோய் தீர்த்தருளும் தன்மையனவாகும் இத்திருமுறை பாடல்கள்
இறைவன் ஒருவனே அவனே சிவன் , அவனோடு ஒக்கும் தெய்வம் வேறொன்றுமில்லை. அப்பெருமான் திருஅருள் சக்தியுடன்இணைந்து ஒரு பொருளாகவே உள்ளான். உயிர்களிடத்தும் அளப்பெரும் கருணை கொண்டவன், உயிர்கள் ஈடேற்றின் பொருட்டுஐந்தொழிகள் செய்கிறான். அப்பெருமானின் மறைமொழி ( மந்திரம் ) திருவைந்தெழுத்தாகும். சிவ சின்னங்கள், திருநீறு, உத்திராட்சம், அப்பெருமானிடம்சேர்ப்பிக்கும் நால்வகை நன்னெறிகள் சரியை, கிரியை, யோகம் ஞானம்என்பனவாகும். இதனை தெளிவாக உணர்த்துவன திருமுறைகளே.
இறைவன் அங்கெங்கெனதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பினும், ஆலயத்திலும், குருவினத்திலும், சிவனடியார்களிடத்திலும் தயிரில் நெய்போல வெளிப் பட்டு காணப்படுகிறான்.
பக்தி இயக்கமானது ஆன்மீக அடிப்படையில் மனித வாழ்க்கையை தூய்மைப்படுத்தி வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வித்து, மனித பிறவி எடுத்ததன் சீரிய நோக்கமாகிய
கடவுளை வணங்கி முத்தி இன்பம் பெறுவதற்கு உறுதுணையாக அமைகின்றது.பக்தி இயக்கத்தை வளர்க்கும் சாதனமாக திருமுறைகள் விளங்குகின்றன.
திருமுறைகளை பாராயணம் செய்தல் நம் அன்றாட வாழ்க்கை பழக்கமாக கொண்டு நல்வாழ்வு வாழ்வோமாக.
திருசிற்றம்பலம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு