சிவ பூசை செய்பவரின் உயர்வு
பஞ்சாக்கினி மத்தியின் நின்று தவம் செய்தல், நீரில் நின்று தவஞ்செய்தல், ஆகிய கடுமையான தவஞ் செய்தாலும், சிவ பூசை செய்யவில்லை எனில் அத்தவம் வீண் செயலாகும். சிவபூசை செய்யாதவர் சென்மம் வீண். அவர் செய்யும் மற்ற தவம், விரதம் , புண்ணியமும் வீணாம். இது உண்மை , சிவ பூசையில்லாமல் மற்ற தவம் விரத புண்ணியங்களை செய்பவர்கள் பிறந்து சுகித்து, சொர்க்காதி போகங்களை அநுபவித்து உழல்வார்கள். சிவபூசை செய்பவர்கள்சிவலோக முத்தியை பெறுவார்கள். இதற்கு பிரமாணம் சிவ ரகசியம் என்ற நூலில்
” ….. தெரிதருந் சிவபூசையற்றவர் சென்னமும்
தவ விரதமும் உரிய புண்ணிய கோடியும் பல
மொன்றுமில்லையே துண்மையே ” என்கிறது
சிவபூசை இல்லாது மற்ற தவங்கள் செய்தால் சொர்க்கலோக முதலான போக வாழ்வு பொருந்தும் பிறவி உண்டாகும்.
சிவபூசை செய்தால் பிறவி தொலையும். சிவபெருமான் உமா தேவிக்கு ஆகம உபதேசம்செய்தருள அவற்றை கேட்டருளிய உமா தேவி தேவரீருக்கு ஆகமங்களில் சொன்ன விசயங்களில் எது மிக வீரியமான செயல் என்று கேட்க சுவாமிகள் எனக்கு பூசையில் தான் அதிகம் விருப்பம் என்று கூறியருள, உமா தேவியும் காஞ்சிபுரத்தில் வந்து சிவ பெருமானை பூசை செய்தாள் என்று புராணம் அருளிச் செய்கிறது.
எண்ணிலாகமம் இயம்பிய இறவைர் தம்விரும்பும்
உண்மையாவது பூசனை என உரைத்தருள
அண்ணாலார் தமை அருச்சனைபுரிய ஆதரித்தாள்
பெண்ணில் நல்லவள் ஆயின பெருந்தவஞ் கொழுந்து — சேக்கிழார்
சிவபூசையில் பல வகையான கிரிகைகள் உண்டு. அவற்றை சோடசோபசாரம் (16) என அருள் நூல்கள் கூறும். இதில் ஒன்று பத்திர புஷ்பங்களால் சிவ நாமங்கூறி அருச்சனை செய்தல், ஆகம விதிப்படி தூய்மையாக மந்திரம் சொல்லி அருச்சனை செய்ய ேவ்ண்டும், ஒரு முறையும் (நெறி) தெரரியாத குரங்கு ஒன்றுவில்வ மரத்தில் உள்ள இலைகளை பறித்து கீழே போட்டது அது மரத்தடியில் இருந்த உமாமகேசுவரர் திருமேனியில் விழுந்தது. உடனே சிவபெருமான் அக்குரங்கை அழைத்து வில்லவத்தினால் நம்மை அருச்சித்தபடியால் நீ பூலோகத்தில் சோழ வம்சத்தில் அரசனாக பிறந்து. உலகத்தை ஆள்வாயாக என்று அருள் புரிந்தார். அப்படியே பிறந்து முசுகுந்த சக்கரவர்த்தியாக இவ்வுலகில் பெயர் பெற்று பூவுலகம் முழுவதமாக ஆண்டு சிவனருள் பெற்றது. இவ் வரலாற்றைக் கூறி அறிவில்லாத குரங்கு ஒரு நெறிமுறையும் தெரியாமல் வில்வ இலையை பறித்து போட்டதற்கு இறையருள் பெற்று மகிழ்ந்தது. என்றால் முறையாக வில்வத்தால் அருச்சனை செய்பவர்கள் பெறும் பேற்றை யாரால் கூறமுடியும். இதனை வியந்து உறைக்கின்றது கருவூரர் புராணம்.
இதனால் சிவபூசையில் ஒரு அங்கமாக உள்ள அருச்சனை மறை தெரியாத குரங்கு செய்து பெரும் பேறு பெற்றதென்றால் சிவ பூசை முழுவதும் முறையாக செய்பவர்கள் பேறு அடையும் விந்தையை விவரிக்க முடியுமா?
(இதுதான் நம் சுந்தரபாண்டியம் ஆத்தடி விநாயகர் கோயில் அருள்மிகு கைலாயநாதர் அமாவாசை சிவபூசையில் பங்கு பெறும் அடியார்கள் தாங்களே வில்வ இலை, மலர் கொண்டு மனத்தால் உருகி வாயால் (மொழி) சிவநாம வழி மந்திரம் தமிழில் கூறி , மெய்யால் தனது திருக்கரத்தால் மலரிட்டு அருசசித்து போற்றி அருச்சனை செய்து வருவது அனைவரும் அறிந்ததே,)
கண்ணபிரான் துவாபரயுக முடிவில் வைகுந்தம் செல்ல எண்ணும் போது முனிவர்கள் கண்ணபிரானடம் கலியுகத்தில் எப்படி நாங்கள் இருப்பது என்று கேட்க, அதற்கு கண்ணபிரான் , சிவபிரான் திருவடிக் கமலம் உண்டு, தீர்த்தமுண்டு, மலருண்டு, வெண்ணீறு உண்டு, ஐந்தெழுத்து உண்டு, ஆகையால் நீங்கள் கவலைப்பட வேண்டாம் இத்தனை கொண்டு சிவபிரானை அருச்சனை செய்யுங்கள் என்று கூறியதை கூரம புராணம் கூறுகின்றது.
விஷ்ணுபிரான் திருவிழிமமழலையில் திருச்சக்கரம் பெற 1000 மலர் கொண்டு அர்ச்சனை செய்துசக்கராயுதம் பெற்றதன் பலன் யாவரும் அறிந்ததே.
சைவாசாரிடத்தில் தீட்சை பெற்றவர்கள் சிவபூசை முறைப்படி செய்ய உரிமையுண்டு,தீட்சை பெறாதவர்களும் சிவ அருச்சனை செய்து புண்ணியம் பெறலாம், சிவ பூசைக்கு சிவ அருச்சனை செய்தல் சிவபுண்ணியம் ,சிவனடியார் பக்தி , சிவதருமம், சிவநூல்கற்றல், கேட்டல், சிவாலய தரிசனம் ஆகியவை அவசியமானது.
தீட்சை பெற்று சிவபூசை செய்வதால் பிறவி இல்லாத சிவகதி பெறலாம். தீட்சை பெற்று இல்லங்களில் ஆன்மார்த்த பூசை செய்யாது கோயில்களில் பிராத்த பூசை செய்பவர்கள் பூசையின் பயனை இழப்பார்கள். பிரம்மா, விஷ்ணு ஆன்மார்த்த பூசை செய்தே தங்கள் தங்கள் அதிகார கிருத்தியங்களை செய்பவர்கள்.
” திருநாமம் அஞ்செழுத்தை செப்பாராகில் ” என்னும் தேவாரத்தில் உணரப்படும் சிவபூசை (அருச்சனை) செய்யாது உண்டவனது உணவு உணவாகாது. அவன்சிவார்ச்சனை இன்றி நீங்கிய முப்புரத்து அசுரர் போலத்தண்டிக்கப்படுவான்,
சிவ லிங்க பூசா பலத்தினாலேயே தேவர்,மனிதர், முதலியோர் செலவத்தோடு வாழ்கின்றனர். சிலர் சத்துருக்களை செயித்து பூமியை அரசாட்சி செய்தார்கள். சிலர் புத்திரர், பசு,செளந்திரியம்,முதலியவற்றை அடைந்து செழிப்புடன்வாழ்கிறார்கள். சகலதருமங்களிலும் இடையூறு இன்றி முற்று பெறும்என்றும், தம்மை அன்போடு வழிபடுபவர்களுக்கு குழைந்து நிற்பார் என்பதும் காமாட்சி அம்மைசெய்த சிவ பூசையினாலேயே பெறப்படும். சகல பாவங்களும் பிராயசித்தமாய் உள்ளது சிவ பூசை
இதனாலேயே அகத்தியர், மார்கண்டேசுவரர் பிரம்மா, விஷ்ணு மற்றும் உமாதேவி, விநாயகர், முருகர், இந்திரன் முதலான தேவர்கள், ஆகியோரும் தேசங்கள் நீங்கவும், மனிதர் அரக்கர் குலத்தோரும், எறும்பு முதல் யானை இறாகவும், பறவை மற்றும் அனைத்து ஜீவ ராசிகளும்சிவபூசை செய்து பயன் பெற்றது பற்றி அதன் அதன் வரலாறுகளால் அறியலாம்.
திருச்சிற்றம்பலம்
இதன்படி சிவ அருச்சனை தாங்களே தனது மனம், மொழி, மெய்யால் சிவபூசையில் அருச்சனை செய்ய அபிசேகப் பொருள்களுடன் ஆத்தடி விநாயகர் கோயில் அ.மி, கைலாய நாதர் சன்னதியில் ஒவ்வொரு அமாவாசை தினத்தில் பூசையில் கலந்து சிவபுணணியம் பெற அன்புடன் அழைக்கிறது, திருநாவுக்கரசர் திருச்சபை ஆன்மீக வழிபாட்டு மன்றம் சுந்தரபாண்டியம், வாருங்கள் அருச்சனை செய்யுங்கள் பலன் அடையுங்கள்
திருச்சிற்றம்பலம்