இறைவழிபாட்டில் தோத்திரங்களால் துதிப்பது

Standard

இறைவழிபாட்டில் தோத்திரங்களால் துதிப்பது
இறைவழிபாட்டில் வேதங்களில் கூறும் மந்திரங்களால் ஜெபித்தாலும், அபிசேக ஆராதனைகள் செய்தாலும், இறைவரை புகழ்ந்து பாடி தேவாரப் பதிகங்களால் பாடி வழிபாடு செய்வது போல் ஆகாது. இதன் தன்மை உணர்ந்து தான் சமயக்குறவர்கள் மற்றும்சமய ஆர்வர்களால் தோத்திரப்பாடல்கள் தோன்றியது . இதன் கருத்தைக் கொண்டே நாவுக்கரசர் சுவாமிகள் ” சலம்பூவோடு தூபம் மறந்தறியேன் தமிழோடு இசை பாட மறந்தறியேன் ” என்கிறார். இதுபோன்று ஞான சம்பந்தரும் தோத்திரங்கள் பல சொல்லி வழிபாடு செய்வதை தனது பதிகங்களின் பாடல்களில் தன் பாடல்களை தோத்திரங்களாக பாடுவதால் பயன் விளைவிக்கும் நோக்கமாக அடியார்களுக்கு பயன் படவும் நல் அருள் வழங்கவும் இறைவனிடமே அன்புடன் வேண்டி வார். அடியார்களுக்காக நால்வர்களால் தோற்றுவித்ததே தேவாரப்பாடல்கள். இந்த தேவாரப்பாடல்களை நமக்காக வேண்டுதல்களாக முன் வைத்து அருள் செய்யுமாறு ஆனையிடுவார் நம் ஞானசம்பந்தர் பெருமான்
நம் துன்பத்திற்கு காரணமானவை நாம் செய்த முன் வினையே என்று அறிந்து நாம் அதிலிருந்து விடுபட முயற்சிக்காது நம் குற்றமே. அன்போடு மலர் பறித்திட்டு தொண்டு செய்து சிவபெருமான் திருவடியை போற்றி வதன் மூலம் முன் வினை நீங்குவதோடு செய்வினையும் தீண்டாது என்பது உண்மை. நம்முடைய திருமுறை தேவாரப்பாடல்களில் பெரும் பாலான பதிகங்களில் வினை நீக்கம் பற்றியே அருளப்பட்டவை. வினை கழிப்பதற்கு என்ன செய்வது என்று அருளாளர்கள் குறிப்பிட்டுள்ளார், அது கைவினை செய்து கழல் போற்றுவதாகும், கைவினை என்பது திருக்கோவில்களில் அலகிடுதல், மெழுகுதல், பூப்பறித்து மாலையாக்குதல், தேவாரப்பாடல்கள் பாடி மனமுருக வேண்டுதல்,

நாம் செய்த தீவினைப்பயன்களால் நவக்கோள்கள் நம் தீவினைப்பயன்கள் நம்மை கெடு விடுவிளைவிக்கும், இதன் பொருட்டு திருஞானசம்பந்தர் ” வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் ” என்று கோளாறு பதிகத்தில்
” ,,,,,, தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியா வண்ணம் உரைசெய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆனை நமதே ” என்கிறார்,
கோளாறு பதிகம் பாடும் அடியார்கள் செய்த எந்த தீவனையானலும் அவர்களுக்கு எந்த வித கெடுதலும் நேரக்கூடாது என்று இறைவன் மீது ஆணை என்கிறார்,
இது போல் திருக்கோளிலி பதிகத்தில் நவக் கோள்களால் ஏற்படும் துன்பம் நீங்க,
” …… சம்பந்தன் வண்தமிழ் கொண்டு
இன்பமர வல்லார்கள் எய்துவர்கள் ஈசனையே ” என்கிறார்

சனிக்கிரக தோசம் – சனி தாக்கத்தில் விடுபட பச்சைப் பதிகம் திருநள்ளாறு ஈசனிடம் வேண்டும் சம்பந்தர்
” ………. ஞான சம்பந்தன் நல்ல
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார்
உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே ” என்கிறார்.

இடர் நீங்கி இன்பம் பெற,
“…… ஞான சம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே” என்கிறார்.

செய்வினை தீவினை நீங்க.
திரு நீலகண்டப் பதிகம் தீக்குழித் தீவினை
” … ஞான சம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடு ம் கூடுவாரே” என்கிறார்

நோய் நீங்கி, நல்லவராய் வாழ.
” …. ஞான சம்பந்தன் சொன்ன தமிழ்மாலை
கோலத்தாற் பாட வல்லார் நல்லாரே ” என்கிறார்

” நீரார் சடையானை நித்தர் ஏத்துவார்
தீரா நோயெல்லாந் தீர்தல் திண்ணமே”

” ……. சிற்றம்பலம் ஏத்த மாணா நோயெல்லாம் வாளா மாயுமே “. எனவும் இதனால்

” … சிற்றம்பலம் மேய நட்டப் பெருமானை நாளும் தொழவோமே” என்கிறார்.
திருச்சிற்றம்பலம்

Leave a comment