இறைவன் கருணையே கருணை

Standard

இறைவன் கருணையே கருணை
சிவபெருமானார் பக்தர்களுக்காக பழி ஏற்றது அளவிடற்கரியது

வில்லால் அடித்தான் விஜயன்;
அருச்சுனனுக்குப் பாசுபதம் அருளியது: பாரதப் போரில் வெற்றி பெறுவதற்காகத் தெய்வப் படைக் கலங்களைப் பெற வேண்டித் தவம் செய்து கொண்டிருந்த அருச்சுனன் முன்னிலையில் வேடன் வடிவில் சிவபெருமான் தோன்றி, ஒரே சமயத்தில் ஒரு பன்றியைத் தாமும் அருச்சுனனுமாக எய்து வீழ்த்தி, அதனால் மாறுகொண்டு, இருவரும் ஒருவரோடொருவர் போர் செய்து, அருச்சுனன் வில்லால் அடித்த தழும்பினை ஏற்று, பின்னர், தம் தெய்வக் காட்சியோடு அவனுக்குப் பாசுபதக் கணையையும் அம்பறாத் தூணியையும் அருளினார்.

கல்லான் அடித்தான் சாக்கிய நாயனார்; 21. சாக்கிய நாயனார்: இவர் புத்த சமயத்தைச் சார்ந்தவராக இருந்தும் பேரின்பப் பேற்றை அருளவல்லது சிவலிங்க வழிபாடே எனத் தேர்ந்து, தன் சமயத்துப் புறத்தோற்றத்தை மாற்றிக் கொள்ளாமலேயே சிவலிங்க வழிபாடு செய்து வந்தார். கல்லையே மலராகக் கொண்டு, ஒரு நாளும் தவறாமல் வழிபட்டு, சிவபெருமான் திருவருளில் கலந்தார். சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவராகப் போற்றப் பெறுபவர்.
காலால் மிதித்தான் கண்ணப்பன்;

கொடுமரக் கிராதன்: வில் தாங்கிய வேடன் என்னும் பொருள்படும் இச் சொல் கண்ணப்பரைக் குறிக்கும். கண்ணப்பர் வேடர் குலத்தினர்; காளத்தி மலைக்கு அருகில் ஒரு நாள் வேட்டைக்குச் சென்றிருந்தார்; அப்பொழுது தற்செயலாகக் காளத்திநாதர் திருவுருவை மலை உச்சியில் கண்டு, அவரிடம் ஈடுபாடு கொண்டார்; மெய்யன்பினால் வழிபட்டார்; வழக்கமாக அங்குச் சிவகோசரியார் செய்து வந்த மறை விதி வழிபாடு ஏற்றது அன்று என்று எண்ணினார். தமக்கு உவப்பானவற்றையே இறைவனுக்கும் உவப்பாக எண்ணிப் படைத்தார். சிவபெருமான் கண்ணிலிருந்து குருதி வரக்கண்டு, தம் கண்ணைப் பெயர்த்துச் சிவபெருமான் வலது கண்ணில் வைத்து மகிழ்ந்தார்; பின் சிவனாரின் இடது கண்ணிலும் குருதி வருவதை அறிந்த கண்ணப்பர், தனது இன்னாெரு கண்ணையும் பியர்தது எடுத்து இறைவரின் கண்ணை அடையாளம் காண தன் காலால் சிவனாரின் இடது கண்ணில் ஊன்றி அடையயாளம் இட்டு தன் கண்ணை அவ்விடதத்தில் இதனால் கண்ணப்பர் ஆறு நாட்களில் திருவருளுக்கு இலக்கானார்; அன்பின் எல்லையாகப் போற்றப் பெறுபவர்; அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்.

பிரம்பால் அடித்தான் பாண்டியன்;

மண் சுமந்தது: வையை நதியில் வெள்ளம் பெருகி, மதுரையை அடுத்து வந்தது. அரசன் ஆணையால் குடிமக்கள் எல்லாரும் கரையைப் பங்கிட்டு, அணையிட்டார்கள், வந்தி என்னும் கிழவிக்கு ஆள் இல்லாமையால், அவள் கூலிக்கு ஆள் தேடினாள். அப்பொழுது அவள் விற்கும் பிட்டையே கூலியாக ஏற்றுக் கொண்டு, கரையிடுவதாக ஒரு கூலி ஆள் கிடைத்தான்; ஆனால் மற்றையார் பங்கெல்லாம் அடைபடவும், வந்தியின் பங்கு மட்டும் அடைபடாதிருந்தது. அவள் அனுப்பிய ஆள் ஆடுவதும் பாடுவதும் பிட்டு உண்பதும் ஆக இருக்கின்றானே அல்லாமல், வேலை செய்யவில்லை என்பதைக் கேட்ட பாண்டிய மன்னன், அந்தக் கூலி ஆளை வெகுண்டு, முதுகில் அடித்தான். அந்த அடி எல்லா உலகிலும் எல்லார் மேலும் பட்டது; வெள்ளமும் வடிந்தது; கூலிஆளும் மறைந்தான். இது இறைவன் திருவிளையாடல் என்பதை யாவரும் உணர்ந்தனர்.

One thought on “இறைவன் கருணையே கருணை

  1. வில்லால் அடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
    கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கக் களிவண்டுகூர்ந்து
    அல்லார் பொழில்தில்லை அம்பலவாணர்க்குஓர் அன்னைபிதா
    இல்லாததால் அல்லவோ, இறைவா கச்சிஏகம்பனே

    Like

Leave a comment